மின்விளக்கு எரியாததால் மக்கள் அவதி!

பொன்னமராவதியில் மின் விளக்கு எரியாததால் மக்கள் அவதி அடைகின்றனர்.

Update: 2024-05-22 09:40 GMT

பொன்னமராவதியில் மின் விளக்கு எரியாததால் மக்கள் அவதி அடைகின்றனர்.


பொன்னமராவதி தாலுகா அலுவலகம் துாத்துார் ஊராட்சியில் அமைந்துள்ளது. தாலுகா அலுவலகம் முதல் கருவூலம் வரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருவிளக்குகள் அமைக்கப்பட் டுள்ளன. இதில் கருவூலம் முன்பு உள்ள தெருவி ளக்கு பல மாதங்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பாதுகாப்பு கருதி மின்விளக்குகளை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News