நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி, தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-02-12 14:05 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி, தலைமையில் நடைபெற்றது நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ச ரா.பேபி,தலைமையில் இன்று  வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை,

வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 219 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு தற்போது மனம் திருந்தி வாழும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக 8 நபர்களுக்கு ரூ.4 இலட்சம் மதிப்பில் தொழில் துவங்குவதற்கான ஆணையினை மாவட்ட வருவாய் அலுவலர் பேபி வழங்கினார்.

இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் .கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News