தர்மபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம்

தர்மபுரியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 252 மனுக்கள் வரப்பெற்றது.

Update: 2024-03-11 12:26 GMT
குறைத்தீர் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது. இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 252 மனுக்கள் வரப்பெற்றன.

பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும். அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் நசீர் இக்பால், ஆதிதிராவிடர் நல அலுவலர் சாகுல் அமீத் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News