குமரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-11 12:07 GMT
மக்கள் குறை தீர் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று  (11.03.2024) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமை வகித்தார். இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி,  சாலை வசதி  உள்ளிட்ட  பல்வேறு  நலத்திட்ட  உதவிகள் கோரி 260 கோரிக்கை  மனுக்கள்  இன்று  பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை  மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் அறிவுறுத்தினார். தனித்துணை ஆட்சியர்  (ச.பா.தி) ஷேக் அப்துல் காதர் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News