ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது.

Update: 2024-03-12 15:40 GMT
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை வசதி,குடிநீா் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 384 மனுக்கள் வழங்கினர்.. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
Tags:    

Similar News