பெரியார் நினைவு தினம் - திமுக நிர்வாகிகள் மரியாதை

பெரியார் நினைவுதினத்தை முன்னிட்டு தென்காசி வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

Update: 2023-12-24 12:30 GMT

பெரியார் நினைவு தினம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு பெரியாரின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட பெரியார் திருவுருவப்படத்திற்கு திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிகள் தென்காசி திமுக மாவட்ட பொருளாளர் இல,சரவணன், சங்கரன்கோவில் திமுக நகரச் செயலாளர் பிரகாஷ், நகர மன்ற தலைவி உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News