குமரியில் நிரந்தரமாக தேசிய பேரிடர் மீட்பு படை வேணும் !

கன்னியாகுமரி பகுதியில் நிரந்தரமாக தேசிய பேரிடர் மீட்பு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்

Update: 2023-12-19 11:24 GMT
அமைச்சர் மனோ தங்கராஜ்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி பகுதியில் நிரந்தரமாக தேசிய பேரிடர் மீட்பு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-   "பேரிடர் காலங்களில் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முறையான ஒரு கட்டமைப்பை ஒன்றிய அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக வைத்து வருகிறோம். ஒகி புயலின் போது இந்த கோரிக்கை மிக அழுத்தமாக முன்வைக்கப்பட்டது. பேரிடர் மீட்புக்குத்தக்க தருணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் முப்படைகள், குறித்த நேரத்தில் வெகு தொலைவில் இருந்து வந்து சேர்வது சவாலாக இருப்பதை கருத்தில் கொண்டு ஒரு நிரந்தர கட்டமைப்பை கன்னியாகுமரி பகுதியில் ஏற்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News