புகையிலை பொருட்கள் கடத்திய நபர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே புகையிலை பொருட்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-08 17:52 GMT

கைது

திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் காவல் நிலைய போலீசார் வந்தவாசி-தெய்யார் சாலை, ஏம்பலம் கூட்டுச் சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, சுமார் ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான 6 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ. 10 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ,தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News