மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை கேட்டு மனு

தஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில், பணி வழங்கக் கேட்டு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-05-10 16:29 GMT

தஞ்சை மாவட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில், பணி வழங்கக் கேட்டு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

தஞ்சை மாவட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கீழக்குறிச்சி, வாட்டாக்குடி, பெரியகோட்டை, புலவஞ்சி, கருப்பூர், அண்டமி, மூத்தாக்குறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், சங்கத்தின் மாவட்ட தலைவர்  டி.கஸ்தூரி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, மதுக்கூர் ஒன்றியத் தலைவர் எம். பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணைத் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியப் பொருளாளர் தில்லையம்மாள் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.  பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  

Tags:    

Similar News