பொன்மலை ரயில் நிலையம் வழியாக அனைத்து பேருந்துகளும் செல்ல வேண்டி மனு

பொன்மலை ரயில் நிலையம் வழியாக அனைத்து பேருந்துகளும் செல்ல வேண்டி மனு அளிக்கப்பட்டடுள்ளது.

Update: 2023-12-20 00:37 GMT

பொன்மலை ரயில் நிலையம் வழியாக அனைத்து பேருந்துகளும் செல்ல வேண்டி மனு அளிக்கப்பட்டடுள்ளது

திருச்சியிருந்து பொன்மலை வரும் பேருந்துகள், மற்றும் பொன்மலையிருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் என அனைத்து பேருந்துகளும் கடந்த இரண்டு மாதம் முன்பு வரை பொன்மலை ரயில் நிலையம் வழியாக சென்று வந்துக் கொண்டு இருந்தது.

ஆனால், தற்பொமுது அந்த பேருந்துகள் அனைத்தும் பொன்மலை ரயில் நிலையம் வராமல் நேராக செல்கிறது. இதனால் ரயிலில் பயணிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் உட்பட அனைத்து பயணிகளும் பெறும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

இதனை கருத்துக் கொண்டு மாவட்ட மாவட்ட ஆட்சியாளிடம் பொதுமக்கள் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பொன்மலை வரும் அனைத்து பேருந்துகளும் பொன்மலை ரயில் நிலையம் வழியாக வந்து செல்ல வேண்டும் என‌ கோரி மனு அளித்தனர்.

Tags:    

Similar News