இருளர் சாதி சான்றிதழ் கேட்டு மனு அளிப்பு

இருளர் சாதி சான்றிதழ் கேட்டு மனு அளிப்பு

Update: 2024-05-23 07:35 GMT

 மனு அளிப்பு

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் புதுப்பேட்டை ஊராட்சியில் உள்ள பாரதி நகரை சேர்ந்த இருளின மக்கள் சாதி சான்றிதழ் இல்லாமல் தொடர்ந்து தவித்து வருகின்றனர். அவருடைய பிள்ளைகள் மேல் படிப்புக்கோ அல்லது படிப்பிற்கோ செல்வதற்கு சாதி சான்றிதழ் அவசியமாகிறது. பல்லாண்டுகளாக தொடர்ந்து அவர்கள் முயற்சி செய்தும் அவர்களுக்கான இருளர் சாதி சான்றிதழ் கிடைப்பதில்லை. இந்த சூழலில் சிதம்பரம் சார் ஆட்சியரை சந்தித்து இருளர் சாதி சான்றிதழ் கேட்டு மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய், கடலூர் மாவட்ட பழங்குடி மக்கள் நல சங்க மாவட்ட செயலாளர் ரஞ்சிதா, பாரதி நகர் நிர்வாகிகள் காளியப்பன், சீனு, சுமதி, மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விரைவில் விசாரணை செய்து சாதி சான்றிதழ் வழங்குவதாக ஆராய்ச்சிகள் ஒப்புக் கொண்டுள்ளார்.
Tags:    

Similar News