தார்சலைகளை சீரமைக்க கோரி எம்எல்ஏ தலைமையில் மனு

பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட பழுதடைந்த தார்சாலைகளை சீரமைக்க கோரி எம்எல்ஏ தலைமையில் தொகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-02-27 13:57 GMT
எம்எல்ஏ தலைமையில் மனு அளிப்பு

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி தலைமையில் ஒன்றியகவுன்சிலர்கள் கோபல், வேலுமல்லன், சம்பத் உள்ளிட்ட ஏராளமான தொகுதி பொதுமக்கள் கலெக்டர் சந்தியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அளேதர்மபுரி விசிசி ரோடு முதல் பெருமாள் கோயில் வரை, ரெட்டியூர் முதல் முத்துக்கவுண்டன் கொட்டாய் வரை, வெள்ளோலை, வி.முத்தம்பட்டி, கே.நடுஅள்ளி, மூக்கனூர் ஊராட்சி, குப்பூர் ஊராட்சி, கோணங்கிநநாயக்கன அள்ளிஊராட்சி, நாய்க்கன அள்ளி ஊராட்சி, வெங்கடசமுத்திரம்,

பையர்நத்தம், அபள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, மூக்க ரெட்டிபட்டி, பாப்பம்பாடி,புதுப்பட்டி, மேளையானூர், பொ.துறிஞ்சிப்பட்டி, ஆலாபுரம், பொம்மிடி ஊராட்சி, கோபாலபுரம், குருபரப்பள்ளி, ராமியான அள்ளி, ராணிமூக்கனூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள தார்சாலைகள் மிகவும் பழுதடைந்து உள்ளன. எனவே, தார்சாலைகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News