பாரதியஜனதாகட்சியின் ஆலயமேம்பாட்டு பிரிவு சார்பில் கோரிக்கை மனு
பாரதியஜனதாகட்சியின் ஆலயமேம்பாட்டுபிரிவு சார்பாக அறநிலையத்துறை அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2023-12-19 12:24 GMT
திருப்பூரில் பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோவிலில் வருகின்ற சனிக்கிழமை வைகுந்த ஏகாதசி நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்காக சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகளவு இருக்கும் என்பதால் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பாக இன்று அறநிலையத்துறை அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.