புதிய அங்கன்வாடி மையம் அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை மனு

ஆலங்குளத்தில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-05-31 13:47 GMT
ஆலங்குளத்தில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை மனு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கருவந்தா கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 60 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் இட நெருக்கடியால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

அதே கிராமத்தில் 3வது வார்டில் புதிய அங்கன்வாடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் அமைச்சர் கீதா ஜீவனிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News