தேனி மாவட்டத்தில் 42 முறை இரத்த தானம் வழங்கியுள்ள மருந்தாளுநர்

தேனி மாவட்டத்தில் மருந்தாளுநர் ஒருவர் 42 முறை இரத்த தானம் வழங்கி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏர்படுத்தி வருகிறார்.

Update: 2024-06-15 11:06 GMT
தேனி மாவட்டம் சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டத்தில் மருந்தாளுநராக உள்ள ரஞ்சித்குமார் , இதுவரை 42 முறை இரத்ததானம் வழங்கி பலருக்கும் உதவி உள்ளார். ' ஏ ' பாசிட்டிவ் இரத்த வகை உள்ள இவர் கடந்த 17 ஆண்டுகளாக இரத்த தானம் செய்து வருகிறார். பல்வேறு இரத்ததான முகாம்கள் நடத்தி பொது மக்கள், இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தேனி மாவட்டத்தில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 37 குழந்தைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை இரத்தம் மாற்று சிகிச்சைக்குத் தேவையான இரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.
Tags:    

Similar News