விழுப்புரம் : அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் இரண்டரையாண்டு சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் துவக்கி வைத்து கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

Update: 2024-03-13 07:33 GMT

புகைப்பட கண்காட்சி 

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் இரண்டரையாண்டு சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான்அவர்கள் துவக்கி வைத்து கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் தலைவர் பழனி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் உள்ளனர். பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி அளித்த விவரம்,

தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டிய சாதனையை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் மூன்று வருடங்களில் செய்து முடித்திருக்கிறார் இதுதான் திராவிடம் மாடல் ஆட்சி ஜாபர் சாதிக் விஷயத்தில் சட்டம் தன் கடமையை சரிவர செய்யும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News