விருதுநகரில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக மறியல் போராட்டம்

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசு கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-16 08:34 GMT
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசு கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது Lpf,citu, AITUC,intuc,LLF,MLF உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ரேஷன் முறையை பலப்படுத்த வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்,100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி தினக் கூலி 600 வழங்க வேண்டும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க வேண்டும், கல்வி மருத்துவம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைவருக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
Tags:    

Similar News