சென்னிமலையில் இருந்து பழனிக்கு பக்தர்கள் வேல்வழிபாடு பயணம்

சென்னிமலை முருகன் கோவிலில் இருந்து பழனி மலைக்கு பக்தர்கள் வேல்வழிபாடு பயணம் செய்தனர்.

Update: 2024-01-01 14:26 GMT

வேலுடன் சென்ற பக்தர்கள்

வேல் வழிபாட்டு குழுவின் சார்பில், முருக பக்தர்கள் தங்கள் வீடுகளில் வழிபாடு செய்து வந்த வேலை எடுத்து வந்து சென்னிமலை முருகன் மலை கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் , முன்னாள் காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் , இந்து முண்ணனியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து,இங்கிருந்து பழனிக்கு வாகனங்களில் எடுத்துச் சென்றனர்.

பழனியில் போகா் சன்னிதி, தண்டாயுதபாணி சன்னிதி , புலிப்பானி சித்தா் சன்னிதியில் உள்ளிட்ட இடங்களில் வேல் வழிபாடு செய்தனர். வழிபாடு நடத்தியதற்கு பின் பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் வேலை எடுத்துச் செல்கின்றனர்..

Tags:    

Similar News