சிப்காட் தொழில் பூங்காவில் 1 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணி
தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் 1 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி துவக்கி வைத்தார். ;
By : King 24X7 News (B)
Update: 2024-03-09 16:08 GMT
மரக்கன்று நட்ட ஆட்சியர்
தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் இன்று (08.03.2024) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 1 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி மரக்கன்றினை நட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் (சிப்காட்) ஜோன் மேரி செல்வராணி,
அன்னை தெரெசா பொறியியல் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், சிப்காட் அலுவலர்கள் மற்றும் மதர் சமூக சேவை நிறுவன குழுவினர்கள் கலந்து கொண்டனர்.