உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-01-31 12:17 GMT
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தலைமையில், அண்ணல் காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணல் காந்தியடிகளை இழிவுபடுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று திமுக தலைவரும் - தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க, அண்ணல் காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தலைமையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சம்பத், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன், ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர்வல்லபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்ககமல், பூலாம்பாடி பேரூர் செயலாளர் செல்வலெட்சுமி சேகர், நகராட்சி உறுப்பினர்கள் சித்தார்த் , நல்லுசாமி, சண்முகசுந்தரம் மற்றும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசீலன், கம்யூனிஸ்ட் கட்சி செல்லதுரை , இந்திய தேசிய காங்கிரஸ்,நல்லசாமி உள்ளிட்ட தோழமைக்கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News