கிணற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவன் பலி - போலீசார் விசாரணை

ஊரப்பாக்கத்தில் கிணற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவன் பலி - போலீசார் விசாரணை

Update: 2024-02-25 07:07 GMT
தற்கொலை 
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கத்தில் வசித்து வரும் ஆம்ஸ்ட்ராங் டேனியல் மகன் மோசஸ் ஜோஸ்வா, 17. இவர், தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். இவர் நண்பர்களான தினேஷ்குமார், ஹரிஹரன், நித்யானந்தம், அஸ்வின், ஹரிஹரன், டென்ஸ்சன் ஆகியோருடன் நேற்று மாலை 6: 00 மணிக்கு, அங்குள்ள விவசாய கிணற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்தபோது, மோசஸ் ஜோஸ்வாவுக்கு நீச்சல் தெரியாததால், கிணற்று நீரில் மூழ்கினார். அவரது நண்பர்கள் அவரது அண்ணன் மெல்வினுக்கு தகவல் தெரிவித்தனர். அவர், உடனடியாக மறைமலை நகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். மறைமலை நகர் தீயணைப்பு துறை மீட்புப் படையினர் விரைந்து வந்து, கிணற்றில் மூழ்கி பலியான மாணவர் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, கூடுவாஞ்சேரி மற்றும் கிளாம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News