பிளஸ் 2 தேர்வு : கரூர் மாவட்டத்தில் 95.90% பேர் தேர்ச்சி

கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.90 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகித்ததில் மாநில அளவில் கரூர் மாவட்டம் 12ம் இடத்தை பிடித்துள்ளது.

Update: 2024-05-06 05:55 GMT

பைல் படம் 

தமிழகம் முழுவதும் நடைபெற்ற முடிந்த பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் அறிந்து வருகின்றனர். மேலும், மதிப்பெண்கள் அறிந்து கொள்ள பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இன்று அரசு கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்ட நிர்வாகம் சற்று முன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவில் கரூர் மாவட்டம் 95.90% பெற்று மாநில அளவில் 12-ஆம் இடம் பிடித்துள்ளது என மற்ற நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
Tags:    

Similar News