பென்னாகரத்தில் பாமக பிரச்சார பொதுக்கூட்டம்

பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம்

Update: 2024-04-05 02:28 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் நேற்று இரவு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார் அப்போது தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர்கள் என்று யாரை கேட்டாலும் அவர்கள் சொல்வது சௌமியா அன்புமணியை தான் தகுதி திறமை படிப்பு சமூக நீதி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்துக்காக ஐநா சபையில் பேசியது என இவரைப் பற்றி ஏராளம் சொல்லலாம். மேலும் பூரண மனு விளக்குகான கோப்பில் பாமக கையெழுத்திடும் அந்த நாள் நிச்சயம் வரும் இதைவிட தமிழ்நாட்டுப் பெண்களுக்கு நல்ல செய்தி ஏதேனும் இருக்கிறதா..? தேசிய ஜனநாயக கூட்டணி, நல்ல கூட்டணி இப்படி ஒரு தலைவராய் என உலகமே வியந்து பார்க்கும் பெருமைக்குரிய தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கின்றார். உலகில் பல நாடுகள் எந்த பிரச்சனை என்றாலும் அவரிடம் ஆலோசனை கேட்கும் வரை உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என பேசினார். இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி வெங்கடேஸ்வரன் எம் எல் ஏ ,தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News