சீர்காழி கிராமங்களில் பாமக வாக்கு வேட்டை

சீர்காழி அடுத்த கடைக்கோடி கொள்ளிடம் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின்

Update: 2024-04-01 07:32 GMT

வாக்கு சேகரிப்பு 

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின்,மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் கடைக்கோடி பகுதியான கொள்ளிடம் பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக மாதாணம் முத்து மாரியம்மன் கோயிலில் துண்டு பிரசுரங்களை வைத்து சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக பாரத பிரதமர் மோடி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பெயரில் சங்கல்பம் அர்ச்சனை செய்தார். வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா. அருள்மொழி, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.தொடர்ந்து மாதானம் கடைவீதியில் வியாபாரிகள் பொதுமக்களிடம் மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அதன் பின்னர் நகர பேருந்தில் ஏறி பேருந்து பயணிகளிடம் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர், திறந்த பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பச்சை பெருமாள் நல்லூர் ,உமையாள்பதி, கண்ணுக்கினியனார்கோயில், குளத்திங்கநல்லூர் கடவாசல், வடகால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிராமம் கிராமமாகசென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
Tags:    

Similar News