மாணவர்களுக்கான கவிதை போட்டி

காஞ்சி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கவிதை போட்டி,பேச்சுப்போட்டி க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு.

Update: 2023-11-19 09:50 GMT
மாணவர்களுக்கான கவிதை போட்டி,பேச்சுப்போட்டி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டம் பொளம்பாக்கம் கிராமத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டைகர்குணா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் இருந்து 316 மாணவர்கள் கலந்துகொண்டு கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்காக கலைஞர் செய்த பல்வேறு சாதனைகளை குறித்து சிறப்பாக பேசினர் இதில் முதல் இடம் பிடித்த மாணவருக்கு ரூபாய் 10,000 மும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூபாய் 7000, மூன்றாம் இடம் பிடித்தவருக்கு ரூபாய் 5000 மற்றும் நினைவு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதனை சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம் எல் ஏ, அவர்கள் கலந்து கொண்டு மாணவ ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருள் மற்றும் சான்றிதழ் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் இராம்பிரசாத், சுரேஷ்குமார், சரளாதனசேகரன், தமிழ்செல்வன், சரண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News