பணம் வைத்து சூதாட்டம்: 11 பேர் கைது!

நந்தீஸ்வரர் கோயில் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-12 06:17 GMT
விராலிமலை ஒன்றியம் கொடும்பாளூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொடும்பாளூர் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, நந்தீஸ்வரர் கோயில் அருகே பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த செல்வம் (45), மகாராஜா (35), சுரேஷ் (37), கருப்பையா (33), கார்த்திக் (32), பழனி (22), ராமன் (35 ),ராஜா (44), குமரேசன் (36), கார்த்திக் (27), சரவணன் (36), ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள், 8 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News