இருசக்கர வாகனம் திருட்டு – வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-06 03:11 GMT

கைது

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதுமனை ரோட்டை சேர்ந்த திருமணி மகன் முத்து செல்வன் (33). இவர், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தரிசன டிக்கெட் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த 1-ந்தேதி இரவு 10 மணி அளவில் வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மோட்டார் சைக்கிளை குலசேகரன்பட்டினம் தியாகராஜபுரம் கணேசன் மகன் பட்டுத்துரை (21) என்பவர் திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை மீட்டனர்.

Tags:    

Similar News