காரில் வந்து ஆடுகள் திருட்டு - 3 பேரை விரட்டி பிடித்த போலீசார்

மன்னார்குடியில் காரில் வந்து ஆடுகள் திருடிய மூன்று பேரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2023-10-25 07:06 GMT

ஆடுகள் திருட்டு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மன்னார்குடி மாரியம்மன் கோவில் தெருவில் காரில் வந்த மூன்று பேர் திடீரென மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளைப் பிடித்து காரில் ஏற்றினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த காரை விரட்டி பிடித்து காரில் இருந்த மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரம் பகுதியைச் சேர்ந்த அராபத், ஆறுமுகம், செல்வராஜ் என்பதும் அவர்கள் காரில் வந்து ஆடுகளை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நான்கு ஆடுகளை மீட்டனர்

Tags:    

Similar News