விதி மீறிய ஷேர் ஆட்டோக்கள் - அபராதம் விதித்த போலீசார்

மதுரை மாநகரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சாலை விதிகளை மீறி இயக்கப்பட்ட ஷேர் ஆட்டோக்கள் மீது 413 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-03-07 08:15 GMT
மதுரை மாநகர காவல் ஆணையர்  உத்தரவுப்படி சாலை விதிகளை மீறி இயக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்பொருட்டு போக்குவரத்து காவல்துறை மற்றும் மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து மதுரை மாநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, அண்ணா பேருந்து நிலையம், மதிச்சியம் உட்பட 10 இடங்களில் மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷோபனா தலைமையில் காவல் துறையினர் மேற்கொண்ட சிறப்பு வாகனத் தணிக்கையின் போது (Auto Special drive) போக்குவரத்து விதிமீறல் செய்து பின்வரும் குற்றங்களில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மீது ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தாமை 301. அதிக கட்டணம் வசூலித்தல் 87, ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டுதல் 21, சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டுதல் 24, போக்குவரத்து இடைஞ்சல் 68. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் 2 என மொத்தம் 613 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதப்பணம் ரூபாய் 4,21,000/- விதிக்கப்பட்டு, விதிமீறலில் ஈடுபட்ட 38 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News