வாகன விபத்தில் மூதாட்டி இறப்பு போலீசார் விசாரணை

சித்தலிங்கபுரம் கிராமத்தில் வாகன விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-06-12 10:37 GMT

சித்தலிங்கபுரம் கிராமத்தில் வாகன விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சித்தலிங்கமடம், பிரதானச் சாலையைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி விஜயா (70). இவா் திருக்கோவிலூா்- திருவெண்ணெய்நல்லூா் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, எதிரே வந்த பைக் இவா் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா். திருக்கோவிலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயா உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Tags:    

Similar News