இளம் பெண் திடீர் மாயம்: போலீஸ் விசாரணை
கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Update: 2023-12-12 08:22 GMT
திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு டவுனில் வசிப்பவர் வாசுதேவன் 24 இவருக்கும் முத்துலட்சுமி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் கருத்து வேறுபாடு காரணமாக முத்துலட்சுமி 20 அவருடைய அம்மா வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போனில் தொடர்பு கொண்டு இருவரும் பேசியதாகவும்கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மாமியார் சமாதானம் பேசி வீட்டுக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அன்று முதல் திடீரென்று வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை என்றும் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கம் தேடியும் கிடைக்கவில்லை என்றும் அவருடைய கணவர் செய்யாறு போலீசில் புகார் செய்தார். உதவி ஆய்வாளர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.