பெண்ணிடம் தங்க நகை பறிப்பு காவல்துறை விசாரணை !!
பெரியாம்பட்டி சமத்துவபுரம் பகுதியில் மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் தங்க நகை பறிப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-05-11 11:47 GMT
காவல்துறை விசாரணை
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலம்,பெரியாம்பட்டி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மனைவி விஜயா இவர் வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு 7 மணியளவில், 2 பேர் டூவீலரில் கடைக்கு வந்தனர். அப்போது கடையில் இருந்த விஜயாவிடம் சிகரெட் கேட்டனர்.
அவர் எடுத்து கொண்டிருந்த போது, கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து விஜயா காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார்செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்து சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.