போலியோ சொட்டு மருந்து முகாம்

திருச்செங்கோட்டில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.

Update: 2024-03-03 08:19 GMT

நாமக்கல் மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ ஆர்.ஈஸ்வரன் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, தொழில் அதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் அருள் குகன்,நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜா, மகேஸ்வரி, செல்வி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் சேன்யோ குமார், கொள்கை பரப்புச் செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News