போலியோ சொட்டு மருந்து முகாம் - கனிமொழி எம்பி துவங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை கனிமொழி எம்பி துவங்கி வைத்தார்

Update: 2024-03-03 17:50 GMT

போலியோ சொட்டு மருந்து முகாம் 

போலியோ சொட்டு மருந்து இளம்பிள்ளை வாதம் என்ற நோயை தடுக்கும் தடுப்பு மருந்தாகும். போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1222 போலியோ சொட்டுமருந்து மையங்களில் 5379 பணியாளர்களை கொண்டு 1,34,199 (ஒரு இலட்சத்து முப்பந்நான்கு ஆயிரத்து நூற்று தொன்னுற்று ஒன்பது) குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும் போலியோ சொட்டு மருந்து முகாம் அனைத்து அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெறும். 18 சிறப்பு குழுக்கள் மற்றும் 128 நடமாடும் குழுக்கள் மூலம் தற்காலிக குடியிருப்புகள், கோவில் திருவிழாக்கள், பஸ் நிலையங்கள் இரயில் நிலையங்கள்,மற்றும் கல்யாண நிகழ்ச்சிகள் ஆகிய இடங்களில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகின்றது. இன்று 03.03.2024 இம்முகாமினை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையிலும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி முன்னிலையிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்கினார். இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் எஸ்.பொற்ச்செல்வன்,
Tags:    

Similar News