திமுக அலுவலகத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் செல்வராஜ் எம்எல்ஏ தலைமையில் நடந்தது.
Update: 2024-02-07 08:49 GMT
மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது திருப்பூர் வடக்கு மாவட்டம், தெற்கு மாநகரம், தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவம்பாளையம் பகுதி செயலாளர், வட்ட செயலாளர்கள், பகுதி வட்ட செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் முரசொலி மாறன் வளாகத்தில் நடந்தது.
இதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். இதற்கு தொகுதி தேர்தல் பார்வையாளரும், சட்ட திருத்தக்குழு உறுப்பினருமான தென்றல் செல்வராஜ், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.