பள்ளியில் களைகட்டிய பொங்கல் விழா

திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளியில் நடந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் மாணவர்களின் பானை உடைத்தல், கயிறூ இழுத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தன.

Update: 2024-01-13 07:22 GMT
திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளி தாளாளர் அருட் தந்தை ஆரோக்கிய பிரபு தலைமை வகித்தார். பள்ளி வளாக அதிபர் அருட்தந்தை பீட்டர், கோமையன்பட்டி பங்குத்தந்தை சேசு ஆரோக்கியம், முன்னிலை வகித்தார். அருட் தந்தையர்கள் ஜான் பிரிட்டோ, தேவன், பாபு, பள்ளி முதல்வர் ரோஸ்லின், துணை முதல்வர் ஞானசீலா உட்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக மார்செலின் மேல்நிலைப் பள்ளி தாளாளர் லாசர் பங்கேற்றார். மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ப்ளு, எல்லோ, கிரீன், ரெட் ஹவுஸ் வாரியாக பொங்கல் வைக்கப்பட்டது. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பானை உடைக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி நடந்தன.
Tags:    

Similar News