பொங்கல் பரிசுத்தொகுப்பு

சேலம் தாதகாப்பட்டியில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.

Update: 2024-01-10 14:20 GMT

சேலம் தாதகாப்பட்டியில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக சேலம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள 26 ரேஷன் கடைகளிலும் பகுதி செயலாளரும், சேலம் மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவருமான ஏ.எஸ்.சரவணன் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் வழங்கி தொடங்கி வைத்தார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, இலவச வேட்டி சேலை மற்றும் ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இதனை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். அப்போது நெசவாளர் அணி அமைப்பாளர் ஓடெக்ஸ் இளங்கோவன், பகுதி துணை செயலாளர் ராஜசேகர் கவுன்சிலர் சீனிவாசன், வார்டு செயலாளர் பம்பாய் முருகேஷ் முன்னாள் கவுன்சிலர் சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News