பூலாம்பட்டி பேரூராட்சி படகு துறை புதுப்பிக்கும் பணி மும்முரம்

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலாம்பட்டி பேரூராட்சி படகு துறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

Update: 2024-06-01 05:09 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலாம்பட்டி பேரூராட்சி படகு துறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.


சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சுற்றுலா பகுதியான இயற்கை மலை சார்ந்த எழில் மிகு குட்டி கேரளா என அழைக்கப்படும் பூலாம்பட்டி பேரூராட்சி காவிரி படகு துறை அமைந்துள்ளது இங்கு தினசரி மற்றும் விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து படகு சவாரி செய்து மகிழ்வர். 

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூலாம்பட்டி படகு துறை முற்றிலும் சேரமடைந்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை ஏற்பட்டிருந்தது அதனை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து பூலாம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் காவிரி கரையோர படகு துறையை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News