ஆக்கிரமிப்பு வீட்டிற்கு மின்சாரம் கட்

நடுவீரப்பட்டு குடியிருப்பில் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் ஏரிக்கரையை உடைத்த நிலையில், அங்கு மின்சாரத்தை துண்டிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-12-15 14:51 GMT

நடுவீரப்பட்டு குடியிருப்பில் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் ஏரிக்கரையை உடைத்த நிலையில், அங்கு மின்சாரத்தை துண்டிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம் நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி, நடுத்தாங்கல் ஏரி நீர்பிடிப்பு பகுதியில், எட்டியாபுரம், குறிச்சி நகர், எம்.ஜி.ஆர்.,நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் ஏரி நீர் சூழ்ந்த நிலையில், ஆக்கிரமிப்பாளர்களில் சிலர் ஏரிக்கரையை உடைத்து நீரை வெளியேற்றினர். இந்நிலையில், ஆக்கிரமிப்பு குடியிருப்பு பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, மின்சாரத்தை துண்டித்து, சோமங்கலம் மின்வாரியத்தினர் மீட்டர் பெட்டிகளை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News