கலிங்கமலை, சொர்ணாவூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

கலிங்கமலை, சொர்ணாவூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-28 03:44 GMT

பைல் படம் 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் உள்ள வழுதாவூர் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை வழுதாவூர், பெரியபாபுசமுத்திரம், கலித்திரம்பட்டு, கலிங்கமலை, பக்கிரிப்பாளையம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல் சொர்ணாவூர் துணை மின் நிலையத்தில் உள்ள சொர்ணாவூர் பீடரில் உயரழுத்த மின் பாதையில் நடைபெ றும் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை சொர்ணாவூர் மேல்பாதி, சொர்ணாவூர் கீழ்பாதி, கலர் கிராமம், கலிஞ்சிக்குப்பம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News