கீழ்வேளூரில் நாளை மின்தடை

கீழ்வேளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகப் பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-14 02:17 GMT

மின்தடை 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நாகை உதவி செயற்பொறியாளர் (தெற்கு) ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-   நாகை மாவட்டம் கீழ்வேளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை 15-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கீழ்வேளூர், ஒதியத்ததூர் கடம்பங்குடி ஓர்குடி கோகூர், ஆனைமங்கலம், அகரகடம்பனூர், ஆழியூர், புலியூர், வடக்காலத்தூர், பட்டமங்கலம்,இலுப்பூர், ராதாமங்கலம், தேவூர்  ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News