பூத்தாழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
சங்ககிரி அருகே பூத்தாழீஸ்வரர் கோயிலில் நடந்த பிரதோஷ சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-02-08 00:54 GMT
பூத்தாழீஸ்வரர்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள பூத்தாலகுட்டை அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமர் பூத்தாழீஸ்வரர் கோயிலில் உள்ள மூலவர் உற்சவமூர்த்தி, நந்தி பகவான் சுவாமிகளுக்கு பால், தயிர்,சந்தனம்,திருமஞ்சனம் திருநீர்,இளநீர்,பன்னீர் உள்ளிட்ட கொண்டு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.