சங்கரநாராயண சுவாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடைப்பெற்ற பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-05-06 01:47 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில்  பிரதோஷம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சங்கரலிங்க சுவாமி கொடிமரம் முன்பு அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு இன்று பிரதோஷம் நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரருக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம், தேன், இளநீர், விபூதி உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News