சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

ஆண்டிமடம், விளந்தை அறம் வளர்த்த நாயகி தர்மசம்வர்த்தினி சமேத மேல அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2024-03-22 14:32 GMT

 ஆண்டிமடம், விளந்தை அறம் வளர்த்த நாயகி தர்மசம்வர்த்தினி சமேத மேல அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. 

ஆண்டிமடம்,மார்ச்.23- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விளந்தை அறம்வளர்த்தநாயகி தர்மசம்வர்த்தினி சமேத மேல அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. கோயில் முன்பு உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆண்டிமடம்-விளந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர். இதேபோல் ஜெயங்கொண்டம் ஜெயங்கொண்டம், தா.பழூர் கங்கைகொண்டசோழபுரம், ஆண்டிமடம், திருக்களம்பூர் திருக்கோடி வனத்தீசுவரர், அழகாபுரம் அழகாபுரீஸ்வரர், விளந்தை அழகு சுப்பிரமணியர் ஆகிய கோயில்களில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
Tags:    

Similar News