ஆதி பரஞ்சோதி சபை சார்பாக பிரத்யங்கரா தேவி யாகபூஜை

திண்டுக்கல் சாணார்பட்டி அடுத்துள்ள மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சபை சார்பாக உலக மக்களின் நலன் வேண்டி மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மகா பிரத்யங்கரா தேவி யாகபூஜை நடைபெற்றது.

Update: 2024-03-10 15:53 GMT

யாகபூஜை

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்துள்ள மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை உள்ளது. இந்த சபை சார்பாக உலக மக்களின் நலன் வேண்டி மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மகா பிரத்யங்கரா தேவி யாகபூஜை நடைபெற்றது. இந்த யாக பூஜையை ஆதி பரஞ்சோதி சகலோக சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதையொட்டி பிரத்யங்கரா தேவி அம்மன், நரசிங்க பெருமாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. பின்னர் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News