போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஆயத்த பயிற்சி

இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஆயத்த பயிற்சி

Update: 2023-11-03 11:14 GMT
இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஆயத்த பயிற்சி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தெரிவித்துள்ளதாவது: குடிமைப்பணிகளுக்கான அரசாணை எண்.177 கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்துறை (மீன்5) நாள்13.09.2017 -ன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டு தோறும் 20 மீனவ இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டி தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பட்டதாரி கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவ நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணைய தளமான www.fisheries.tn.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்துறை துணை - இயக்குநர் மற்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய ஆவணங்களுடன் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் 18.11.2023 பிற்பகல் 5.00 மணிக்குள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், கதவு எண்1-165, இராமசாமி கவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்(அஞ்சல்), தருமபுரி, (கைப்பேசி எண்-9384824260) என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News