பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்
திருவெண்ணெய்நல்லுாரில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
Update: 2024-01-11 05:54 GMT
திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவெண்ணெய்நல்லுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் நடைபெற்ற விழாவிற்கு கூட்டுறவு சங்க செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணை சேர்மன் ஜோதி, கவுன்சிலர்கள் செந்தில்முருகன், ரஹமத்துன்னிசா ஷாஜகான் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கணேசன் வரவேற்றார். விழாவில் பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், ரூ.1000 உட்பட பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.