3 வது முறையாக பிரதமராக பதவியேற்பு: அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ள பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சி சிறப்பாக அமைய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2024-06-09 12:46 GMT

மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ள பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சி சிறப்பாக அமைய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அபிஷேகம் நடைபெற்றது.


திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மீண்டும் 3 வது முறையாக இன்று பிரதமராக பதவி ஏற்க உள்ள நரேந்திர மோடியின் ஆட்சி சிறப்பாக அமையவும் அவர் நீடூழி வாழவும் சமயபுரத்தில் குடிகொண்டுள்ள அருள்மிகு மாரியம்மனுக்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்ப்பாட்டில் பாஜக நிர்வாகிகள் சிறப்பு அபிஷேகமும் மற்றும் அர்ச்சனையும் நடைபெற்று அம்மனை வழிப்பட்டனர் .

இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட மகளிர் அணி தலைவி கௌரி, மண்டல தலைவர் கணேசன்,மாவட்ட கல்வி பிரிவு செயலாளர் செந்தில், சமயபுரம் நகரத் தலைவர் பாலசுந்தரம் லால்குடி நகர பொதுச்செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், 183 கிளைத் தலைவர் ஜெயபால், ராஜு,சௌந்தர், இளையராஜா மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News