சேலம் மத்திய சிறையில் கைதி திடீர் சாவு

சேலம் மத்திய சிறைச்சாலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-28 15:55 GMT

சிறையில் கைதி மரணம்

தேனி மாவட்டம், ரயில்வே கேட் கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா (52). இவரை கஞ்சா கடத்தல் வழக்கில் காட்பாடி போலீசார் கடந்த 2022ம் ஆண்டு கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அங்கிருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கல்லீரலில் பிரச்னை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கடந்த 21ம் தேதி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல் நலனில் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. நேற்று அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News