நாகர்கோவில் தப்பி ஓடிய கைதி திருப்பதியில் சிக்கினார்

கன்னியாகுமரி மாவட்டம், வீரவநல்லூரில் தப்பியோடிய பாலியல் குற்றவாளியை திருப்பத்தியில் காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-03-07 16:59 GMT
கைதான சிவகுமார்

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே வீரவநல்லூரை சேர்ந்தவர் சிவகுமார் என்று சுடலை ஆண்டி 56) வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். இதற்கு இடையே அதே பகுதியை சேர்ந்த 15) வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ்சார் கைது செய்து விசாரித்தனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சிவகுமாரை மருத்துவ பரிசோதனைக்காக பாளையங்கோட்டை சிறையில் இருந்து போலீசார் கடந்த 11. 10. 2023 அன்று அழைத்து வந்தனர். அப்போது வடசேரி பஸ் நிலையத்தில் வைத்து சிறுநீர் கழித்து வருவதாக கூறி போலீசார் ஏமாற்றி தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து தணிப்படை போலீசார் அவரை கடந்த நான்கு மாதங்களாக தேடி வந்தனர். ஆனால் அவர் சிக்கவில்லை. எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை .

தொடர்ந்து சிவகுமாரின் செல்போன் சிக்னலை வைத்து கண்காணித்தனர். இதில் அவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் நேற்று சிவகுமாரை சுற்றி வளைத்த படித்தனர். பின்னர் தனிப்படை போலீஸ் கைது செய்து நாகர்கோவில் கொண்டு வந்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News